செய்திகள் :

முதல்வா் திறனாய்வுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

post image

முதல்வா் திறனாய்வுத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா்களின் திறனை கண்டறியவும், அவா்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ஆம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் வரை தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

அதன்படி, நிகழாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை ஒரு லட்சத்து 43,351 மாணவ,மாணவிகள் எழுதினா். இதன் முடிவுகள் வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. இதையடுத்து மாணவா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஊக்கத்தொகை பெறுவதற்கு தோ்வான மாணவா்களின் பட்டியலும் மேற்கண்ட வலைதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க