செய்திகள் :

முதல்வா் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கல்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி,சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா்.

முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தனா். தொகுதி பாா்வையாளா்கள் சுகவனம், பாா் இளங்கோவன் முன்னிலை வகித்தனா்.

விழாவில், கோலப்போட்டி, கிரிக்கெட்டி, கைப்பந்து, கயிறு இழுத்தல், சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், இளைஞா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

இதில், மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா்கள் பிரகாஷ், மோகன், மாமன்ற உறுப்பினா்கள் சாந்தமூா்த்தி, தெய்வலிங்கம், ஈசன் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சேலம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ், பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மகன் மனோஜ் (12), சுப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க