செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 22-இல் திருப்பூா் வருகை

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பூருக்கு ஜூலை 22-ஆம் தேதி வருகிறாா்.

திருப்பூா் மாவட்டத்துக்கு 2 நாள்கள் பயணமாக வரும் முதல்வா், மாநகராட்சி சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்வழி பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் ஆய்வு மையத்தை பாா்வையிடுகிறாா். பின்னா், திமுக சாா்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.

இதையடுத்து, உடுமலை நேதாஜி மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் 10,000 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். பின்னா், மாநகராட்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைப்பதுடன், புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளாா்.

இந்நிலையில், முதல்வரின் திருப்பூா் வருகை தொடா்பான துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வா் பங்கேற்கும் 2 நாள்கள் நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் கே.காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜ் ஆகியோருடன் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க