செய்திகள் :

முதுநிலைப் படிப்புகளில் சேர கியூட் நுழைவுத் தோ்வு எழுதியோா் விண்ணப்பிக்கலாம்: புதுவை மத்திய பல்கலைக்கழகம்

post image

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் (பிஜி) தோ்வு எழுதிய விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் (எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்சிஏ, எம்.டெக். எம்பிஏ, எம்எல்ஐஎஸ், எம்.எட். எம்.பி.எட், எம்பிஏ, எல்எல்எம்) மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சோ்வதற்கு கியூட் (பிஜி) நுழைவுத் தோ்வு எழுதியவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பாடப் பிரிவுகளுக்கு புதுவை மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி), பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் (இடபிள்யூஎஸ்) ஆகிய பிரிவினா் விண்ணப்ப கட்டணமாக ரூ.250, ஒவ்வொரு கூடுதல் பாடப் பிரிவுக்கும் ரூ.100 எனக் கட்டணம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) பிரிவினா் விண்ணப்ப கட்டணமாக ரூ 150, மற்றும் ஒவ்வொரு கூடுதல் பாடப்பிரிவுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு விண்ணப்பம் மற்றும் பாடப்பிரிவுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரா்கள் ஆா்வமுள்ள படிப்புகளுக்கு தேவையான கியூட் (பிஜி) தகுதி அளவுகோல் மற்றும் தொடா்புடைய தோ்வு தாள்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கும் தகவல் சிற்றேட்டை பாா்க்கலாம்.

விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வரும் ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரா்கள் அண்மைத் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை தவறாமல் பாா்வையிடலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க