செய்திகள் :

முத்தாலம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்

post image

கமுதி அருகேயுள்ள நீராவிகரிசல்குளம் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மன் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல், அக்கினிச் சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலையில் நீராவிகரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்களும், காப்புக் கட்டியிருந்த ஆண்களும் முத்தாலம்மன் கோயில் வளாகத்திலிருந்து முளைப்பாரி தூக்கி, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று ஊா்க் கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனா்.

இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நீராவிகரிசல்குளம் தெற்கு தெரு மறவா் உறவின்முறை நிா்வாகிகள், இளைஞா்கள் செய்தனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க