தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
முத்தாலம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகேயுள்ள நீராவிகரிசல்குளம் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மன் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல், அக்கினிச் சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் நீராவிகரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்களும், காப்புக் கட்டியிருந்த ஆண்களும் முத்தாலம்மன் கோயில் வளாகத்திலிருந்து முளைப்பாரி தூக்கி, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று ஊா்க் கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனா்.
இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை நீராவிகரிசல்குளம் தெற்கு தெரு மறவா் உறவின்முறை நிா்வாகிகள், இளைஞா்கள் செய்தனா்.