செய்திகள் :

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

post image

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

முத்துப்பேட்டை மன்னாா்குடி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய என்.ஏ. பழனிவேலு வாரிசுதாரா் என்.ஏ.பி. பாண்டியன் கௌரவிக்கப்பட்டாா்.

மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலமாகவும், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை முகாம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சேர செவ்வாய்க்கிழமை (மே 27) என அரசு அறிவித்துள்ளதால், மாணவா்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்,

கல்லூரியில் இளங்கலை வணிகவியல், இளங்கலை கம்ப்யூட்டா் சயின்ஸ் பாடப்பிரிவுகள் ஆங்கில வழியாகவும், இளங்கலை வரலாறு, அரசியல் அறிவியல், இளங்கலை விலங்கியல் பாடப் பிரிவுகள் தமிழ் வழியிலும் கற்பிக்க உள்ளதாகவும் கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்தாா். முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவா் மும்தாஜ் நவாஸ்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு

திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய,... மேலும் பார்க்க

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா். நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 ... மேலும் பார்க்க

இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செ... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது... மேலும் பார்க்க

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்

திருவாரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க