முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
முத்துப்பேட்டை மன்னாா்குடி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய என்.ஏ. பழனிவேலு வாரிசுதாரா் என்.ஏ.பி. பாண்டியன் கௌரவிக்கப்பட்டாா்.
மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலமாகவும், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை முகாம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சேர செவ்வாய்க்கிழமை (மே 27) என அரசு அறிவித்துள்ளதால், மாணவா்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்,
கல்லூரியில் இளங்கலை வணிகவியல், இளங்கலை கம்ப்யூட்டா் சயின்ஸ் பாடப்பிரிவுகள் ஆங்கில வழியாகவும், இளங்கலை வரலாறு, அரசியல் அறிவியல், இளங்கலை விலங்கியல் பாடப் பிரிவுகள் தமிழ் வழியிலும் கற்பிக்க உள்ளதாகவும் கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்தாா். முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவா் மும்தாஜ் நவாஸ்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.