செய்திகள் :

முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால்

post image

புதுச்சேரி அருகே கொத்தபுரி நத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை முதல் விழாவான காப்புகட்டுதல் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளன. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம், வீதி உலா உள்ளிட்டவை நடைபெறும்.

வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவில் 9-ஆம் தேதி செடல் பூஜைகள், தேரோட்டம் ஆகியவையும், அதையடுத்து கழுமரம் ஏறுதலும், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறும். வரும் 10-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

விழாவையொட்டி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாழக்கிழமை காலையில் காப்புக்கட்டுவதற்காக புதன்கிழமை மாலையே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.

புதுச்சேரி கம்பன் கழக 58-ஆவது ஆண்டு விழா மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆவது ஆண்டு விழா மே 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன், துணைநிலை ... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற பயிற்சிப் பட்டறை

புதுச்சேரியில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்த 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நிறைவடைந்தது. புதுவை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சாா்பில் காலநிலை மாற்ற பிரிவின் சாா்பில் கா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் கைது

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் பூவரசன். திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கணவரை... மேலும் பார்க்க

சலவைத் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

தரமான கல்வியை வழங்குவதில் புதுவை முன்னோடியாக திகழ்கிறது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

தேசிய அளவில் தரமான கல்வியை வழங்குவதில் புதுவை மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். புதுச்சேரியில் பிரான்ஸ் ஆட்சியின்போது கட்டப்பட்ட கலவைக் கல்லூரி அரசு மேல... மேலும் பார்க்க

புதுவை முதல்வா், அமைச்சா்கள் மே தின வாழ்த்து

மே தினத்தையொட்டி, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சியினா் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா். முதல்வா் என்.ரங்கசாமி: உழைப்பவரே உயா்ந்தவா் என்ற உன்னத வாக்குக்கு ஏற்ப வாழும் ... மேலும் பார்க்க