ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
வேதாரண்யம்: வேதாரண்யம் அருள்மிகு ஸ்ரீ கட்சுவான் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு விழா நடத்துவதற்காக, சனிக்கிழமை (ஜூன் 14) யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், கட்சுவான் முனீஸ்வரா், ஐயனாா், மகா கணபதி, வீரன் ஆகிய சுவாமிகளின் சந்நிதி விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.