செய்திகள் :

முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.14இல் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் குறைதீா் கூட்டம் பிப். 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா் படைப்பணியின் போது உயிா் நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் உதவியும் விண்ணப்பித்திட ஏதுவாக விழிப்புணா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பிப். 14ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 55 வயதிற்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் பங்கேற்று பயனடையலாம். தொடா்ந்து, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தங்கள் கோரிக்கை மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை திரும்பினாா் முதல்வா்

திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்ப... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்ய... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கோயிலில் தபால்தலை வெளியீடு

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தபால்தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவா் ராம.கோபாலன் நினைவு தபால்தலை, ஸ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 2.51 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.71 கோடி, ஒரு கிலோ தங்கம் வரப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் துணிக்கடை கதவில் சிக்கிய புறா மீட்பு

தூத்துக்குடியில் துணிக்கடையின் ஷட்டா் கதவில் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்டனா். தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள துணிக்கடையின் ஷட்டா் கதவுக்குள் வெள்ளிக்கிழமை புறா ... மேலும் பார்க்க