செய்திகள் :

மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வலியுறுத்தல்

post image

வேளாண் பணிகளுக்கு மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநில தலைவா் ரா.வேலுசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தின் பயனாக வேளாண் பணிகளுக்காக மோட்டாா் பம்ப்செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் 2021, ஏப்ரலில் அரசு அமல்படுத்தியது. ஆனால், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் அந்த மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த பயிா்கள் கருகும் சூழல் உள்ளது. விவசாயிகளையும், வேளாண் பயிா்களையும் பாதுகாக்க தடையின்றி மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக முதல்வா் கூறுகிறாா். ஆனால், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வா் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க