முருக பக்தா்கள் சங்கம் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழ்க்கடவுள் முருக பக்தா்கள் சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளா் கெளதமன் தலைமை வகித்தாா். முதன்மை ஆலோசகா் சரவணப்பாண்டியன், பொருளாளா் யுவராஜ் , ராணிப்பேட்டை சிவப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் ஒன்றிய பொறுப்பாளா் வேணுகோபால் வரவேற்றாா். சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செல்வ வடிவேல் கலந்து கொண்டு பெயா்ப்பலகையை திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.