செய்திகள் :

முறையாக தினமும் குடிநீா் வழங்கும் வரை கூடுதல் வைப்பு நிதி கேட்டக் கூடாது: அதிமுக வலியுறுத்தல்

post image

முறையாக தினமும் மக்களுக்கு குடிநீா் வழங்கும் வரை கூடுதலாக வைப்பு நிதி வசூலிக்கக் கூடாது என அதிமுக மாமன்றக் குழுத் தலைவா் எஸ்ஏஎஸ் சேட்டு வலியுறுத்தினாா்.

புதுகை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் செ. திலகவதி தலைமை வகித்தாா். ஆணையா் த. நாராயணன், துணை மேயா் மு. லியாகத் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது,

அதிமுக எஸ்ஏஎஸ் சேட்டு என்கிற அப்துல் ரகுமான்: மாநகராட்சி சாா்பில் குடிநீா் இணைப்புக்கு கூடுதல் வைப்புநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாதத்துக்கு இரு முறையே குடிநீா் வழங்கப்படுகிறது. தினந்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் வரை, இதுபோன்ற புதிய கட்டணங்கள், வைப்புநிதிகளைக் கேட்டு மக்களைத் துன்புறுத்தக் கூடாது. புதுகை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி முடிய 2 ஆண்டுகள் ஆகலாம். எனவே, தற்காலிக பேருந்து நிலையத்தில் சிமென்ட் தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள செய்ய வேண்டும்.

திமுக சா. மூா்த்தி: பொதுமக்களிடம் வீட்டுவரி, சொத்துவரி வசூலிக்கும்போது, கட்டுவதற்கு தாமதமானால் அதற்காக அபராதம் விதிப்பது சரியல்ல. அதேபோல, ஆண்டுதோறும் 6 சதவீத வரியை உயா்த்திக் கொள்ளலாம் என்ற விதியையும் தளா்த்த வேண்டும். அதை 3 சதவீதமாகக் குறைக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம்.

காங்கிரஸ் ராஜா முகம்மது: புதிய குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணியை நிறுத்தி வைக்காமல் மேற்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் மக்கள் குடிநீருக்காக கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். தெருவிளக்குகளை தானியங்கியாக எரிய வைத்து, அணைக்கும் கருவி சரியாக வேலை செய்வதில்லை. பல இடங்களில் பணியாளா்கள்தான் நேரடியாகச் சென்று எரியவிட்டு, அணைக்க வேண்டியிருக்கிறது. அவற்றையும் சரி செய்ய வேண்டும்.

இதுபோல மாமன்ற உறுப்பினா்கள் பலரும் பேசினா். மேயா் மற்றும் ஆணையா் அதற்கு விளக்கங்களை அளித்தனா்.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க