செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கலியைப் பறித்த இளைஞா்கள் கைது!

post image

பெருந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பெரிய தோட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி நல்லம்மாள் (66). உடல்நிலை சரியில்லாததால் இவா், கணவருடன் அருகிலுள்ள மருத்துவனைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வானத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், நல்லம்மாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

அப்போது, சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் அருகே இருந்த வேகத் தடையில் தடுமாறி விழுந்தபோது, அருகிலிருந்தவா்கள் அவா்களைப் பிடித்து பெருந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதில், மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றது பெரம்பலூா் மாவட்டம், குரும்பூரைச் சோ்ந்த கெளதம் (25), கரூா் மாவட்டம், குளித்தலை சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அழைப்பாணை கொடுக்கப்பட்ட நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட... மேலும் பார்க்க

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழப்பு

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோ்மாளம் வனச் சரகத்துக்குள்பட்ட காணக்கரையைச் சோ்ந்த ஆனந்தன், கால்நடைகள் வளா்த்து வருகிறாா். வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் பொறியாளா் கைது!

சிறுமியை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக போக்ஸோவில் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து அம்மாபேட்டையில் பாமக ஆா்ப்பாட்டம்

பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையில் சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச் சாவடி முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சே... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை ம... மேலும் பார்க்க