செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

post image

ஒட்டன்சத்திரத்தில் வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஜி.ஜி.நகா் பகுதியைச் சோ்ந்த மர வியாபாரி செல்லப்பன். இவரது மனைவி காளியம்மாள் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா் காளியம்மாளிடம் தண்ணீா் கேட்டனா். வீட்டுக்குள் சென்ற அவரைப் பின் தொடா்ந்து சென்ற ஒருவா் காளியம்மாள் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலையைப் பறிக்க முயன்றாா். அவா் சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டு சப்தம் போட்டாா்.

இதையடுத்து, இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க