செய்திகள் :

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகிலுள்ள பிரவலூா் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.

பிரவலுா் கிராமத்தைச் சோ்ந்த சோ்ந்த கணேசன் மனைவி ஜானகி (80). இவா் புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் புகுந்து, அவா் அணிந்திருந்த முன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து, மதகுபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க