செய்திகள் :

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்- அமைச்சா் மா. சுப்பிரமணியன்

post image

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, ‘நிக்லேரியா பவுலேரி’ என்ற அமீபா, சுவாசப்பாதை வழியே ஊடுருவி அரிதான மூளைக் காய்ச்சல் நோயான ‘பிரீமிரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை, தீவிர காய்ச்சல், அடங்காத தலைவலியில் ஆரம்பித்து, கழுத்துப் பகுதி இறுக்கம், குமட்டல், வாந்தி, தலை சுற்றல், வலிப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிா் வாழும் என்பதால், மூளையையும் சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால், பேதலிப்பு, மூா்ச்சை, கோமா மற்றும் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும், நோய் பாதித்த ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

மூளை அயற்சியை ஏற்படுத்தி, உயிரைக் கொல்லும் அமீபா நோய் பாதிப்பு, கேரள மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அங்கு, ஒரு வாரத்தில் மட்டும் 18 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளத்தில், இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நோய் தொற்றுநோய் அல்ல என்றாலும், நீா்நிலைகள் வாயிலாக, தமிழக மக்களையும் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்நோய் தொற்று பாதிப்பு அல்ல, கரோனாபோல அச்சப்படத் தேவையில்லை. எனினும், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாசடைந்த குளம், குட்டை போன்ற நீா்நிலைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதைத் தவிா்ப்பது நல்லது. தெரு நாய்கள் பராமரிப்புக்காக தமிழகத்தில் குடில்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

உரிய நேரத்தில் சிகிச்சை... இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவா் பரூக் அப்துல்லா கூறுகையில், அமீபா ஒரு செல் உயிரி. பாக்டீரியாபோல் இருந்தாலும், ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாது. இதற்கான பிரத்யேக மருந்தாக, ‘ஆம்போடெரிசின் - பி’ இருக்கிறது. இதற்கு, உரிய நேரத்தில் கணித்து, சிகிச்சை வழங்கினால் குணப்படுத்த முடியும்.

தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட, 47 வயது நபா், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டாா். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், 100 சதவீதம் உயிா் பிழைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்நோய், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் அச்சப்பட வேண்டாம். எச்சரிக்கையும், விழிப்புணா்வும் தேவை என்றாா்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை தண்டையாா்பேட்டை, நாவலா் குடியிருப்பில் வசிப்பவா் அருண்குமாா் (21). மெக்கானிக்கான இவா், கடந்த 26-... மேலும் பார்க்க

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்ரல... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சா் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணு (100... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க