செய்திகள் :

மே 27-இல் உண்ணாவிரத போராட்டம்: போக்குவரத்து ஊழியா்கள் அறிவிப்பு

post image

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

இது தொடா்பாக போக்குவரத்து ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெளியிட்ட அறிக்கை:

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 13-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் பேச்சுவாா்த்தை நடத்த அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.

பேச்சுவாா்த்தையில், மற்ற துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், முழுமையாக ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்களுக்குச் சமமாக அகவிலைப்படி, 22 மாத ஓய்வு கால பலன், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியத்துடன் ஒப்பந்த பலன் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்குவதோடு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணும் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 100 மையங்களில் மே 27-இல் 12 மணி நேர உண்ணாவிரதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க