செய்திகள் :

மே 29 - 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி! நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன?

post image

பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்.

இரு நாள்களில் நான்கு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைக்கவுள்ளதால், திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல்கள் குறித்து காணலாம்.

சிக்கிம்

இரு நாள்கள் பயணமாக சிக்கிம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு பங்கேற்கிறார்.

அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிலத் திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். நம்சி மாவட்டத்தில், ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கை கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை, சங்கச்சோலிங் பகுதியில் பயணிகள் ரோப் வழி, காங்டாக் மாவட்டத்திலுள்ள சங்கோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜபேயி சிலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கம்.

மேற்கு வங்கம்

இதேநாள் (மே 29) பிற்பாதியில் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணிக்கவுள்ளார். அங்கு அலிபுர்தூர் மற்றும் குச் பிகார் மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிகார்

பின்னர் 2.15 மணிக்கு மேற்கு வங்கத்திலிருந்து பிகாருக்குச் செல்கிறார். அங்கு மாலை 5.45 மணியளவில் பாட்னா விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். ஒரு கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் ரூ. 1200 கோடி மதிப்பில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பிஹ்தா விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ. 1410 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னாவிலுள்ள ஐஐடி மற்றும் என்ஐடிக்கு அருகில் பிஹ்தா பகுதி உள்ளதால் கல்வியியல் மையமாகத் திகழ்கிறது.

மே 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் பிகார் மாநிலம் கராகட் பகுதியில் ரூ. 48,520 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஒளரங்காபாத் மாவட்டத்தில் உள்ள நபிநகர் சூப்பர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு 3x800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறவுள்ளது. இதன்மதிப்பு ரூ. 29,930 கோடி. இது பிகார் மற்றும் கிழக்கு மாநிலங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கும் வித்திடும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும்.

பாட்னா - அர்ராஹ் - சசாரம் பகுதிகளிடையே பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி - ராஞ்சி - கொல்கத்தா இடையிலான 6 வழிச் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னா - கயா - தோபி இடையே நான்கு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சோன் நகர் - முகம்மது கஞ்ச் இடையே ரூ. 1330 கோடி மதிப்பிலான ரயில்வே பாதை திட்டத்தை நாட்டுக்கி அர்ப்பணிக்கிறார்.

உத்தரப் பிரதேசம்

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 20,900 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

கெளதம புத்தா நகரில் யமுனா தொழில் துறை மேம்பாட்டு ஆணையத்தில் 220 கிலோ வாட் துணை மின் நிலைய கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நொய்டாவில் ரூ. 320 கோடி மதிப்பிலான துணை மின் நிலையத்தை தொடக்கி வைக்கிறார்.

கான்பூரில் ரூ. 8300 கோடி மதிப்பிலான பான்கி அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். ரூ. 9330 கோடி மதிப்பில் 660 மெகா வாட் திறன் கொண்ட கெளதம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தையும் தொடக்கி வைக்கிறார்.

இதையும் படிக்க | இந்தியர்கள் பிலிப்பின்ஸ் செல்ல விசா தேவையில்லை: முழு விவரம்!

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க