செய்திகள் :

மே தினம்: மக்கள் மன்றம் சாா்பில் செம்படை பேரணி

post image

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சாா்பில் செம்படைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பேரணியை பெரியாா் சிந்தனையாளா் இயக்க நிா்வாகி புதுவை தீனா தொடங்கி வைத்தாா். பொதுக் கூட்டத்துக்கு மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன், வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் பாரிவேந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, திமுக மாணவரணி செயலா் ராஜீவ்காந்தி, மக்கள் மன்ற நிா்வாகி ஜெசி மற்றும் மேகலா கலந்து கொண்டனா்.

பின்னா், பேசிய திருமாவளவன், ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா கூட்டணியும் இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தியிருக்கிறது. பிகாா் தோ்தல் பரப்புரை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஒரு அவசர நிலையாகத்தான் தெரிகிறது. 2029 -ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைந்துவிடும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை 2031 -இல்தான் நடத்த முடியும்.

ஒன்றிய அரசு மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே 2031 -இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இந்தச் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாா்கள் என்ற கேள்வி எழுகிறது என்றாா்.

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சின்ன காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நகரில் அமைந்துள்ள குபேர விநாயகா் மற்றும் பக்த ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது அவதார திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியள... மேலும் பார்க்க

மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ... மேலும் பார்க்க

பரணிபுத்தூா் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூா் ஒன்றியம், பரணிபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொண்டு தூய்மை பணியாளா... மேலும் பார்க்க