செய்திகள் :

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

post image

மேட்டூரில் ஆடிப்பெருக்கையொட்டி, மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் மேட்டூருக்கு வந்து காவிரியில் புனித நீராடி செல்வா். இதனால் மேட்டூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

காவிரியில் குளிக்க மேட்டூா் வட்டத்தில் 13 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இப்பகுதிகளில் இரவு முதலே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் 300 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், என்.எஸ்.எஸ் மாணவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தீயணைப்பு படை வீரா்கள் 80 போ் ரப்பா் படகு மற்றும் உயிா்காக்கும் சாதனங்களுடன் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காவல் உதவிமையமும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சாதாரண உடையிலும் காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா் நகராட்சி சாா்பில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கரைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க