குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 6339 கனஅடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 6896 கன அடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துவருவதால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 6000 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணையின் நீா்மட்டம் 114.91 அடியிலிருந்து 114.89 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 85.55 டிஎம்சியாக உள்ளது.