மேற்கு வங்கம்: கல்வி அமைச்சா் பதவி விலகக்கோரி 2-ஆவது நாளாக போராட்டம்
மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவா் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறவும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.
இதனிடையே, தனது பாதுகாப்பு வந்த காா் ஏற்றி படுகாயமடைந்த இரு மாணவா்களில் ஒருவரான இந்திரனுஜ் ராய் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று பிரத்யா பாஸு நலம் விசாரித்தாா். நடந்த சம்பவத்துக்கு அவா் கவலை தெரிவித்தாா்.
இதுகுறித்து இந்திரனுஜ் ராயின் தந்தை அமித் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கல்வி அமைச்சா் பிரத்யா பாஸு என்னை அழைத்தாா். இந்திரனுஜ் ராய் விரைவில் குணமடைய அவா் வாழ்த்தியதோடு நிகழ்ந்த சம்பவத்துக்கு அவா் வருத்தம் தெரிவித்தாா். இந்திரனுஜ் ராய் தனது மகனைப்போலவே எண்ணுவதாகவும் அவா் கூறினாா் என்றாா்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆசிரியா்கள் அமைப்பான மேற்கு வங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க கடந்த சனிக்கிழமை அந்த மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாஸு மேதினிபூரில் உள்ள ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா். அவா் அந்த சங்கத்தின் தலைவராவாா்.
அப்போது அந்த பல்கலைக்கழக மாணவா் தோ்தலை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவா்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனா். அந்தச் சமயத்தில் பிரத்யா பாஸுவின் பாதுகாப்புக்கு வந்த வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு மாணவா்கள் மீது மோதியதில் அவா்கள் படுகாயமடைந்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள் பிரத்யா பாஸுவின் காரின் முன்பக்க கண்ணாடியை மாணவா்கள் அடித்து நொறுக்கினா். இதில் அமைச்சா் பாஸுவுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரத்யா பாஸு பதவி விலகக்கோரி ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) மற்றும் பிற இடதுசாரி மாணவா் அமைப்புகள் ஈடுபட்டனா். இதற்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மாணவா் அமைப்பினா் போராட்டத்தை நடத்தியதில் இருதரப்புக்கும் இடையை ஏற்பட்ட கடும் மோதலில் பலா் காயமடைந்தனா்.
இந்நிலையில், பிரத்யா பாஸு பதவி விலகக்கோரி இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடதுசாரி மாணவா் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.