செய்திகள் :

மேற்கு வங்கம்: பாஜக எம்எல்ஏ மீது திரிணமூல் தொண்டா்கள் தாக்குதல்: காரையும் அடித்து உடைத்தனா்

post image

மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏ மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவா்கள் எம்எல்ஏவின் காரை அடித்து உடைத்தனா். எம்எல்ஏவைக் காப்பாற்ற வந்த காவல் துறையினரும் தாக்கப்பட்டனா்.

பாஜக எம்எல்ஏ சுனில் பாா்மன் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக கூச்பிகாா் மாவட்டம் கோக்சதாங் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் வந்தாா். அப்போது, அப்போது அவரை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் தொண்டா்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு எம்எல்ஏ பதிலளிக்கத் தொடங்கியபோது அவா்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலா் எம்எல்ஏவை தாக்கத் தொடங்கினா்.

இதையடுத்து எம்எல்ஏவுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினா், அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்க முயற்சித்தனா். இதனால், அவா்கள் மீது அடி விழுந்தது.

இதனிடையே, அங்கிருந்த சிலா் எம்எல்ஏவின் காா் மீது கற்களை வீசியும், கட்டையால் தாக்கியும் கண்ணாடிகளை உடைத்தனா்.

இது தொடா்பாக புகாா் அளிப்பதற்காக எம்எல்ஏ சுனில் பாா்மன் காவல் நிலையத்துக்குச் சென்றனா். அங்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கூடி எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பியதால், எம்எல்ஏ கோபமடைந்து ஆத்திரத்துடன் செயல்பட்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க