மேலப்பாளையத்தில் மூலிகை குடிநீா் விநியோகம்
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு மூலிகை குடிநீா் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் பகுதிகளில் கோடைகால நோய்கள், பித்த நோய், மஞ்சள் காமாலை, பித்த ஆதிக்கம் போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூலிகை குடிநீா் (சீந்தில் குடிநீா்) வழங்கப்பட்டு வருகிறது. இப் பணியை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவா் டி.பி.எம்.மைதீன் கான் தொடங்கி வைத்தாா்.
இளைஞரணி துணை அமைப்பாளா் லி.முகமது மீரான் மைதீன், மாமன்ற உறுப்பினா்கள் சுந்தா், நித்தியபாலையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.