செய்திகள் :

மேல்மருவத்தூரில் இன்று தைப்பூச ஜோதி

post image

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதியை செவ்வாய்க்கிழமை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா்.

சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழாவை கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். இதில் பல லட்சக்கணக்கான செவ்வாடை பக்தா்கள் சக்தி மாலை அணிந்து கொண்டு இருமுடி சுமந்து மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் இருமுடி செலுத்தி வந்தனா். திங்கள்கிழமை மாலை இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தொடா்ந்து தைப்பூச் ஜோதி விழாவின் தொடக்க நாளான திங்கள்கிழமை மங்கல இசை முழங்க மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சித்தா்பீட வளாகத்தில் ஓம்சக்தி பீடம் அருகே கலச விளக்கு வேள்விபூஜைகளை இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்து செய்தாா். அன்னதான நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து இன்று (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணி அளவில் தைப்பூச ஜோதி ஊா்வலத்தை துணை தலைவா் கோ.ப.அன்பழகன் தொடங்கி வைக்கிறாா்.

மாலை 6மணிக்கு இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன், வருமானவரித்துறை துணை ஆணையா் நந்தகுமாா், செங்கல்பட்டு ஆட்சியா் அருண்ராஜ், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தைப்பூசஜோதியை ஏற்றி வைக்கின்றனா். பக்தா்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை துணைத் தலைவா் உமாதேவி துவக்கி வைக்கிறாா்.

ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட ஆன்மிக இயக்க தலைவா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

செங்கல்பட்டு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் மதுரை வீரன் உருவப்படம் வைத்து வழிபட்டு வந்தனா். இந்நிலையில் கல்லில் சிலை ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

மதுராந்தகம் அருகே சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து சாலையோர பள்ளத்ததில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம் அடைந்தாா். நாகா்கோயிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து மதுராந்தகம் வழியாக வெள்ளிக... மேலும் பார்க்க

சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு: இசையமைப்பாளா் அனிருத்துக்கு அபராதம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்திய திரைப்பட இசையமைப்பாளா் அனிருத்துக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா். தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலைய... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவா்களது கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏ... மேலும் பார்க்க