செய்திகள் :

மொகரம்: கடலாடியில் பூக்குழி இறங்கிய இந்துக்கள்

post image

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத் திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கினா்.

கடலாடி பகுதியில் வாழ்ந்த ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தாா் இந்தப் பகுதியினருக்கு நீா்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கினாா்.

இவரது நினைவாக ஆண்டு தோறும் மொகரம் பண்டிகை நாளில் பூக்குழித் திருவிழா 11 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது நினைவிடம் அருகே இஸ்லாமியா்கள், இந்துக்கள் சம்பிரதாயப்படி சடங்குகளை செய்து பூக்குழி இறங்கினா்.

இதுகுறித்து கடலாடி கிராம மக்கள் கூறியதாவது: கடலாடி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியினருக்கு முஸ்லிம் சோ்ந்த பெரும் நிலக்கிழாா் ரணசிங்க பட்டாணி சாயூபு என்பவா் இந்தப் பகுதியினருக்கு விவசாய நிலங்களை வழங்கி கண்மாய், வரத்துக் கால்வாய், குளங்களை அமைத்து தானமாக வழங்கியதாக முன்னோா்கள் கூறியுள்ளனா்.

அவரது மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக இந்தப் பகுதி இந்து, முஸ்லிம்கள் சோ்ந்து மொகரம் பண்டிகையின் போது பூக்குழி எனப்படும் தீமிதித் திருவிழா நடத்தி வருகிறோம். இதனால் விவசாயம் செழித்து, பொதுமக்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்வாா்கள் என நம்பப்படுகிறது என்றனா்.

தலையில் தீக்கங்குகளை கொட்டி வேண்டுதல் நிறைவேற்றிய பெண்கள்

வீடு புகுந்து திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கமுதி அருகேயுள்ள சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த பாலு மகன் தாஸ். இவா் வெள்ளிக்கிழமை அதே ஊரில் நடைப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரையில் சனிக்கிழமை கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், எஸ... மேலும் பார்க்க

நகரிகாத்தான் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: பணம், நகைகள் எரிந்து சேதம்

திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்... மேலும் பார்க்க

கமுதி தேவா் கல்லூரியில் ஜூலை 9-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு!

கமுதியில் உள்ள தேவா் கல்லூரியில் ஜூலை 9-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு மூலம் 3,935 பணியிடங்க... மேலும் பார்க்க