செய்திகள் :

மோடிக்கு `ஓகே’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மும்பை தாக்குதல் குற்றவாளி!

post image

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக நடந்த இத்தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் தொழிலதிபர் தஹாவ்வூர் ஹுசைன் ராணாவிற்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தஹாவ்வூர் ராணா 2008ம் ஆண்டு நவம்பர் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அதே மாதம் 11ம் தேதி இந்தியாவிற்கு வந்துவிட்டு அதேமாதம் 21ம் தேதி வரை இருந்துவிட்டு சென்றுள்ளான்.

மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல்

ராணாவிற்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணாவும், டேவிட் ஹட்லீயும் இணைந்து இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ராணா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுடன் தாக்குதல் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறான். ராணாவும், டேவிட்டும் இது தொடர்பாக இமெயில் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்தது. இதில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் தீவிரவாதத்திற்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளான்.

இதையடுத்து ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் தன்னை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து ராணா அமெரிக்க கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான். அவனது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தற்போது நாடு கடத்துவது ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. இதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதல் தேவையாக இருந்தது. தற்போது பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தீவிரவாதி ராணாவை நாடு கடத்தவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

டொனால்டு டிரம்ப் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பேச்சுவார்த்தைப்பிறகு ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவான் என்று ட்ரம்ப் தெரிவித்தார். இதையடுத்து பல ஆண்டு போராட்டத்திற்கு இந்தியாவிற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. விரைவில் ராணா மும்பைக்கு நாடு கடத்திக்கொண்டு வரப்படுவான் என்று தெரிகிறது. முதல் கட்டமாக இந்திய அதிகாரிகள் ராணாவிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"கிரவுண்டுக்கு வேண்டாம்; குறிஞ்சிக்கு வந்துடுங்க..." - திமுக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி!

கிரிக்கெட் போட்டி!தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பில் தி.மு.க... மேலும் பார்க்க

செங்கோட்டையன் போர்க்கொடி... வாரிவிடும் ஐகோர்ட் தீர்ப்பு... நெருக்கடியில் சிக்கிய எடப்பாடி?

சமீபத்தில் கோவையில் அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்... மேலும் பார்க்க

Victoria Hall: வேகமெடுக்கும் சென்னை விக்டோரியா பொதுக்கூடம் புதுப்பிப்புப் பணிகள்! | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

M.K.Stalin: `எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்...' - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு மடலை எழுதியிருக்கிறார். அதில், 'அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட உருவ முடியாது.' எனக் கூறியிருக்கிறார்.ஸ்டாலின்தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவ... மேலும் பார்க்க

கண்ணியமற்ற `நாடு கடத்தல்’ - தென் அமெரிக்க நாடுகளிடம் இந்தியாவுக்கான பாடம் என்ன?

நாடு கடத்தல் டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல... மேலும் பார்க்க

ஸ்டாலினால் பாஜக-வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி... நயினார் நாகேந்திரன் அளித்த பதில் என்ன?

ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உ... மேலும் பார்க்க