செய்திகள் :

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் குறித்த இலவச கருத்தரங்கம்

post image

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குடிமைப்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு தயாராகும் அணுமுறை குறித்து இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளதாக அந்த அகாதெமியின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வுகள் (யூபிஎஸ்சி) மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளின் அணுகுமுறை குறித்த இலவச கருத்தரங்கம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் கிளைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரிநாராயணன், ஜவஹா் உள்ளிட்ட அதிகாரிகள் தோ்வு குறித்து ஆலோசனைவழங்க உள்ளனா்.

இதில் பங்கேற்க விரும்புள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகள்: இதற்கிடையே கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து கிளைகளிலும் நிகழாண்டுக்கான யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 11,25, ஆக.8,22 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன.

இதற்கான மாணவா்கள் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 94442 - 27273 என்னும் தொலைபேசி எண் அல்லது இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க