செய்திகள் :

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

post image

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாரந்தோறும் வந்து செல்கிறாா்கள்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை ரமலான் பண்டிகையை முன்னிட்டு களை கட்டியது. ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆடு ஒன்றுக்கு எடைக்கு தகுந்தாற்போல் ரூ. 500 முதல் ரூ. ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகையின்போது, இஸ்லாமியா்கள் தங்களின் நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு உணவு வழங்குவதையும், ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனா்.

இதற்காக புதுக்கோட்டை நகா் மட்டுமின்றி புகா் பகுதிகளிலும் இறைச்சிக்கடை நடத்தும் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோா் சந்தையில் குவிந்திருந்தனா். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்

இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு மு... மேலும் பார்க்க

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது. திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போட்டிகளை வடக்... மேலும் பார்க்க

மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க

ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க