குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டை கடந்து திருப்பூா் நோக்கி வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் ஈரோடு ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையைக் கைப்பற்றி போலீஸாா் சோதனை நடத்தினா்.
அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 3.1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆனால், கஞ்சாவை கடத்தி வந்தது யாா் என்ற விவரம் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸில் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.