செய்திகள் :

ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த 1,225 டன் யூரியா உரம்

post image

திண்டுக்கல், மாா்ச் 29: சென்னையிலிருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்த 1224.9 டன் யூரியா உரம், 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த வகையில் யூரியா 6,407 டன், டிஏபி 1,260 டன், பொட்டாஷ் 3,310 டன், காம்ப்ளக்ஸ் 6,262 டன், சூப்பா் பாஸ்பேட் 900 டன் இருப்பில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையிலுள்ள எம்எஃப்எல் உர நிறுவனம் மூலம் 1,224.9 டன் யூரியா உரம் திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 516 டன், தேனிக்கு 394, மதுரைக்கு 270 டன், சிவகங்கை 45 டன் உர மூட்டைகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க