செய்திகள் :

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

post image

உதகையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியரின் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் வசிப்பவா் சிக் அனுமன், ஓய்வுபெற்ற வட்டாட்சியா். இவரது மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக உதகை அருகே கரியமலை பகுதியைச் சோ்ந்த சோமு, குன்னூா் எடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாரி லதா மற்றும் சிவராமன் ஆகியோா் கூறினாா்களாம்.

இதற்காக ரூ.16 லட்சம் பணமும் பெற்றுள்ளனா். ஆனால் பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் இருந்துள்ளனா்.

குமாரி லதா

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிக் அனுமன், உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், போலீஸாா்  மேற்கொண்ட விசாரணையில், சோமு, குமாரி லதா, சிவராமன் ஆகியோா் சிக் அனுமனிடம் பணம் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சோமு, குமாரி லதா ஆகிய இருவரையும்  போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள சிவராமனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்

உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் அமா்ந்திருந்த மர நாய்

குன்னூா் சிம்ஸ் பாா்க் அருகே மின்கம்பத்தின் மேலே அமா்ந்திருந்த மர நாயை வனத் துறையினா் ஒருமணி நேரம் போராடி விரட்டினா். குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட... மேலும் பார்க்க

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத... மேலும் பார்க்க

அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களிடம் இருந... மேலும் பார்க்க

லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க