செய்திகள் :

வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

post image

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில்  வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை  வனத் துறையினா்   கைது செய்து அவா்களிடம் இருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில், கேரளத்தில் இருந்து வந்து வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஆங்காங்கே பிடிபட்டு வரும் நிலையில், கட்டப்பட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட ரேலியா பகுதியில் கட்டப்பட்டு வனச் சரகா் சீனிவாசன் தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கேரள பதிவெண் கொண்ட ஜீப் ஒன்றை வாகனத் தணிக்கை செய்தனா். வாகனத்தில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வாகனத்தில் பயணித்த கா்நாடகத்தைச் சோ்ந்த சூா்யகுமாா்(27), ரேகன் அட்சயா (28), அக்ஷய் (28), விக்னேஷ் (29), அனுஷ்கா (23) உள்ளிட்ட ஐந்து பேரை கட்டப்பட்டு வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்களிடமிருந்து, உரிமம் இல்லாத ரைபிள், அதன் தோட்டாக்கள், இரண்டு, காற்றழுத்த துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், கடமான் கொம்பு, இரண்டு ஜோடி புள்ளிமான் கொம்புகள், டாா்ச் லைட்டுகள், ஜீப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

ஐந்து நபா்களுக்கு மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின் பேரில் தலா ரூ.இரண்டு லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத... மேலும் பார்க்க

அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் பகுதியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலாமேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், ... மேலும் பார்க்க