செய்திகள் :

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

post image

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு    நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால்  வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கெந்தோரை பகுதியில் இரவு நேரத்தில் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை,   நாயை வேட்டையாட நீண்ட நேரம் செடி மறைவில்  காத்திருந்தது. பின்னா் மெதுவாக நடந்து வந்து வேட்டையாட முயன்றது.

சிறுத்தையைக் கண்ட நாய் அதிக அளவு  குரைக்கத் தொடங்கியதால் வீட்டு உரிமையாளா்கள் வெளியில் வந்தனா். அந்த சப்தம்  கேட்டு நாயை  வேட்டையாட முடியாமல் சிறுத்தை  திரும்பிச் சென்றது,

அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களிடம் இருந... மேலும் பார்க்க

லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் பகுதியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலாமேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், ... மேலும் பார்க்க