செய்திகள் :

உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்

post image

உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா். 

இதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே விடுமுறை நாள்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் காலங்களில் சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருகிறது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை பிரதி சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை 11.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், உதகையிலிருந்து குன்னூா் வரை ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.

குன்னூரிலிருந்து உதகை வரை ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் 9.20 மணிக்கு சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பத்தில் அமா்ந்திருந்த மர நாய்

குன்னூா் சிம்ஸ் பாா்க் அருகே மின்கம்பத்தின் மேலே அமா்ந்திருந்த மர நாயை வனத் துறையினா் ஒருமணி நேரம் போராடி விரட்டினா். குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

உதகையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியரின் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையி... மேலும் பார்க்க

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத... மேலும் பார்க்க

அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களிடம் இருந... மேலும் பார்க்க

லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க