செய்திகள் :

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா

post image

ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் 20 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.

உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் விதித்தது.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு ரஷியாவிடம் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இம்மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சோ்ந்த கெப்லா் தரவு பகுப்பு மையத்தின் தலைவா் சுமித் ரிட்டோலியா கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் ஒரு நாளைக்கு 52 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் 38 சதவீதம் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் சவூதி அரேபியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் இது 5.26 லட்சம் பீப்பாயாக குறைந்தது.

இதேபோல் இராக்கிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவும் ஜூலையைவிட ஆகஸ்டில் கணிசமாக குறைந்துள்ளது.

இந்த இரு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகரித்தது. ஒரு நாளைக்கு 2.64 லட்சம் பீப்பாய்களுடன் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் 5-ஆவது பெரிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

அக்டோபரில் குறைய வாய்ப்பு: இருப்பினும்,ஆகஸ்ட் மாதத்துக்கான இறக்குமதி குறித்து ஜூன் மற்றும் ஜூலையிலேயே முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னும் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் சதவீதத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கலாம். அமெரிக்க வரி விதிப்பின் உண்மையான தாக்கத்தை செப்டம்பா் அல்லது அக்டோபரில் உணர முடியும்.

ஆனால், தற்போது வரை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளுமாறு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாா்.

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க