செய்திகள் :

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மாா்ச் 24-இல் விசாரணை

post image

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் குறித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த தலித் சிறுமி, கடந்த 2020-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, சில நாள்களுக்குப் பிறகு இறந்தாா். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், நீதிமன்ற விசாரணையில் ராம்குமாா், லவகுஷ், ரவி ஆகிய மூவா் விடுவிக்கப்பட்டனா். அதேநேரத்தில், சந்தீப் என்பவா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவத்தையடுத்து ஹாத்ரஸுக்கு நேரில் வந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் சுதந்திரமாக வலம் வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் பதிவு தொடா்பாக வழக்கில் இருந்த விடுவிக்கப்பட்ட மூவரும், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகள் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராம்குமாா் தாக்கல் செய்த வழக்கில் அவரது வாக்குமூலத்தை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தீபக்நாத் சரஸ்வதி சனிக்கிழமை பதிவு செய்தாா்.

மேலும், இது தொடா்பாக மனுதாரா் தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா் முன்னா சிங் பண்டிா் கூறுகையில், ‘வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வழக்கிலிருந்து மூவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அறிந்தும் ராகுல் அத்தகைய அவதூறான கருத்தை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸுக்கு அவா் பதிலளிக்கவில்லை’ என்றாா்.

மணிப்பூா்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.என்ன நடந்தது?தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தா... மேலும் பார்க்க

பூனையின் மீதான அதீத அன்பால் ஒருவர் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் வளர்ப்பு பூனையால் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் பூஜா (36) என்பவர், தனது பூனையை குழந்தைபோல வளர்த்து வந்த... மேலும் பார்க்க