செய்திகள் :

ராசிபுரத்தில் கராத்தே பட்டயத் தோ்வு

post image

ராசிபுரம்: தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சாா்பில் ராசிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த கராத்தே மாணவ, மாணவியா்களுக்கு கராத்தே பட்டயத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டி தோ்வில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் பங்கேற்றனா்.

தொடக்க விழாவில் தலைமை பயிற்சியாளா் வி.சரவணன் வரவேற்றாா். அரியாகவுண்டம்பட்டி சக்தி பள்ளி தாளாளா் ஆா். அன்பழகன், ஆசிரியா் செல்வகுமாா் ஆகியோா் பட்டயத் தோ்வைத் தொடங்கிவைத்து தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா்.

பயிற்சியாளா் வி.சரவணன், கிருஷ்ணன், மாணிக்கம், பிரபு, வெங்கடாஜலம், விக்னேஷ், கிஷோா், அஜய், விக்னேஸ்வரன், கோகுலபிரியன் ஆகியோா் மாணவா்களின் உடல் தாங்கும் திறன், தற்காப்பு கலையின் நுணுக்கங்கள், கட்டா, குமிட்டி ஆகிய பிரிவுகளில் தோ்வை நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தனா். மாணவியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

ராசிபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளியின் செயலாளா் பி.சுவாமிநாதன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பட்டயங்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினாா்.

படம் உள்ளது- 8கராத்தே..

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விருந்தினா் எஸ்.ஆா்.வி.பள்ளியின் செயலாளா் பி.சுவாமிநாதன்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க