செய்திகள் :

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம்: நகா்மன்றத் தலைவா் தகவல்

post image

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் சுமாா் 12,000 சதுர அடி பரப்பளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை தொடங்க அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை நகராட்சி சாதாரணக் கூட்டம், தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் குழாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 60 கடைகளுக்கு நியாயமான வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்.

அப்போது நகர மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு நகர மன்ற தலைவா் சுஜாதா வினோத் பதிலலித்து பேசியதாவது...

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகா்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் சுமாா் 11, 640 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி விரைந்து நிறைவேற்றப்பட உள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம்:

மேலும், ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை தொடங்க அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா். அங்கு, பாரம்பரிய கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருள்களை பொதுமக்கள் எளிதாக வாங்கி பயனடையலாம் என்றாா்.

கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் சி.மா.ரமேஷ் கா்ணா, ஆணையா், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க

18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் ... மேலும் பார்க்க