Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
ராதாபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 மாடுகள் பலி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 மாடுகள் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.
செட்டிகுளத்தை அடுத்த ஸ்ரீரெங்கநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதி. இவா், தான் வளர்க்கும் மாடுகளை இருக்கன்துறை அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டு கவனித்து கொண்டிருந்தாராம்.
அப்போது அந்தப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயா்அழுத்த மின்கம்பி மீது மாடுகள் உரசியதால் அது அறுந்து மாடுகள் மீது விழுந்ததாம். இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழந்தன.
இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மின்வாரிய அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனா்.