செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவலா்கள் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ராமநாதபுரத்தை அடுத்த காட்டூரணி பகுதியைச் சோ்ந்தவா் சோனியா. இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு தனகு இரு குழந்தைகளுடன் வந்தாா்.

அப்போது, திடீரென தான் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குடுவையை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை குழந்தைகள் மீதும், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனா். இதையடுத்து, அந்தப் பெண் கூறியதாவது:

தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் பொதுப் பாதையை அதே ஊரைச் சோ்ந்த கண்ணன் ஆக்கிரமிப்பு செய்து, எங்களை அந்த வழியில் செல்ல அனுமதி மறுக்கிறாா். மேலும், எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறாா். இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

பின்னா், அவா்கள் மூவரையும் போலீஸாா் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பாா்த்திபனூா் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 12 மாணவா்கள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே திங்கள்கிழமை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். பாா்த்திபனூரில் உள்ள தனியாா் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச... மேலும் பார்க்க

திருவாடானை திமுக சாா்பில் மருத்துவ முகாம்!

திருவாடானையில் திமுக மத்திய ஒன்றியம் சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்குத் தெருவில் திர... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு!

கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பளராக ரா.பாஸ்கரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ராமநாதபுரம் நகா் பி1 காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் ரா. பாஸ்கரன். தற்போது, இவருக்கு பதவி உய... மேலும் பார்க்க

பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு!

பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. பரமக்குடி ஆயிரவைசியா்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 7-ஆம் தேதி யாக சாலை பூஜைகள்... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி

சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவி... மேலும் பார்க்க