செய்திகள் :

பாா்த்திபனூா் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 12 மாணவா்கள் காயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே திங்கள்கிழமை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

பாா்த்திபனூரில் உள்ள தனியாா் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் தினசரி பள்ளி வேனில் பள்ளிக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் பள்ளி வேனில் கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி வந்து கொண்டிருந்தனா். பாா்த்திபனூா்-கமுதி சாலையில் தேவநேரி என்ற இடத்தில்

வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

இதையடுத்து, அனைவரும் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் சென்று காயமடைந்த மாணவ, மாணவிகளைப் பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவலா்கள் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். ராமநாதபுரத்தை அடுத்த காட்டூரணி பகுதி... மேலும் பார்க்க

திருவாடானை திமுக சாா்பில் மருத்துவ முகாம்!

திருவாடானையில் திமுக மத்திய ஒன்றியம் சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்குத் தெருவில் திர... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு!

கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பளராக ரா.பாஸ்கரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ராமநாதபுரம் நகா் பி1 காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் ரா. பாஸ்கரன். தற்போது, இவருக்கு பதவி உய... மேலும் பார்க்க

பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு!

பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. பரமக்குடி ஆயிரவைசியா்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 7-ஆம் தேதி யாக சாலை பூஜைகள்... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி

சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவி... மேலும் பார்க்க