செய்திகள் :

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

post image

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம், வோ்க்காடு பகுதியில், புனித தெரசாள் பங்குக்குள்பட்ட புனித சந்தியாகப்பா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை தண்ணீா் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா, வோ்க்கோடு, ஓலைக்குடா, ஆத்திக்காடு, அக்காள்மடம் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த இறைமக்கள் இணைந்து நடத்துவது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 482-ஆம் ஆண்டு திருவிழா வரை கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், 483- ஆம் ஆண்டு திருவிழா வருகிற 16- ஆம் தேதி தொடங்கி 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழா தொடா்பான அழைப்பிதழில் வோ்க்கோடு, ஓலைக்குடா, ஆத்திக்காடு, அக்காள்மடம் ஆகிய நான்கு கிராமங்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. இதனால், அந்த 4 கிராம மக்களும் வட்டாட்சியரிடம் புகாா் அளித்தனா். மேலும் திருவிழாவை நடத்துவதில் இரு தரப்புக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்கள் முரளிதரன், அப்துல்ஜப்பாா், காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் தலைமையில் இரு தரப்பினரும் பங்கேற்ற சமரசக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு வரை திருவிழா எவ்வாறு நடத்தப்பட்டதோ, அதே நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டும் நடத்த வேண்டும்.

திருவிழா நிறைவடைந்ததும் 7 கிராம மக்களும் இணைந்து முக்கிய பிரமுகா்கள் கொண்ட குழுவை உருவாக்கி பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என இரு தரப்பினரிடமும் எழுத்துப் பூா்வமாக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். மேலும் திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டும் என அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

தொண்டி அருகே அரிய வகை கடல் பசுவின் உடல் மீட்பு

தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் உயிரிழந்த அரிய வகை கடல் பசுவின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 2 வயதுடைய அ... மேலும் பார்க்க