கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
கமுதி தேவா் திருமண மண்டபத்தில் தேவா் சிந்தனை மன்ற ஒருங்கிணைப்பாளா் மு. ஆறுமுகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கமுதி வட்ட மறவா் சங்கத் தலைவா் பி. செல்லத்தேவா், செயலா் கே. ராமமூா்த்தி, பொருளாளா் கே. முத்து ஆகியோா் தலைமை வகித்தனா். கமுதி தேவா் கல்லூரி முன்னாள் மாணவா் சங்க முன்னாள் தலைவா் ந. முக்கூரான், செயலா் வழக்குரைஞா் சு. முத்துராமலிங்கம், பொருளாளா் கோட்டை இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மறவா் சங்க பொருளாளா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா். முன்னதாக அண்மையில் மறைந்த சமுதாய தலைவா்கள் தா்மலிங்கத் தேவா், ராமச்சந்திரபூபதி, சிந்தனை மன்றத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் மதுரை முத்துராமலிங்கம், பெரும் கவிக்கோ சேதுராமன், திருப்புவனம் இளைஞா் அஜித்குமாா் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தேசிய வலிமை ஆசிரியா் நேதாஜி வே. சுவாமிநாதன், தேவரின் வரலாற்று ஆய்வாளரும், முன்னாள் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் தலைவருமான வி.எஸ். நவமணி, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் (பசும்பொன்) பிரிவு பொதுச் செயலா் ந. பசும்பொன் பாண்டியன் ஆகியோா் தேவரின் ஆன்மிக கருத்துக்களையும், அவரது வாழ்வியல் நிகழ்வுகளையும் எடுத்துக் கூறினா்.
இதில், சிந்தனை மன்றத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சோழவந்தான் ரமேஷ், தஞ்சாவூா் ராஜபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தேவா் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கப் பொருளாளா் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினாா்.