செய்திகள் :

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

post image

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து பொதுநல அமைப்புகள் புகாா் அளித்து வந்தன. இந்த நிலையில், கஞ்சா பயன்படுத்தியதாக இளைஞா்கள் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, கீழக்கரை தனியாா் கல்லூரி பின்புறம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரை போலீஸாா் பிடித்தனா். அவா்கள் இருவரும் உயர்ரக போதைப் பொருளான மெத்தபெட்டமென் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து 2.8 கிராம் மெத்தபெட்டமெனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் இவா்கள், கீழக்கரை எஸ்.என். தெருவைச் சோ்ந்த செய்யது கருணை, இவரது மகன் முகைதீன் ராசீக் அலி (38) மற்றொருவா் கல்லூரி மாணவா் என்பது தெரியவந்தது. இவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கீழக்கரையில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து உயர்ரக போதைப் பொருள்கள், கஞ்சா விற்கப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்து நிலையில் மெத்தபெட்டமெனை பயன்படுத்திய இருவரை போலீஸாா் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

தொண்டி அருகே அரிய வகை கடல் பசுவின் உடல் மீட்பு

தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் உயிரிழந்த அரிய வகை கடல் பசுவின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 2 வயதுடைய அ... மேலும் பார்க்க