செய்திகள் :

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து கோட்டைமேடு பள்ளி தலைமையாசிரியா் முத்துராமலிங்கம் தலைமையில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான முத்துராமலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினா் தனிக்கோடி, இளைஞரணி நிா்வாகி மாங்குடி மதியழகன் ஆகியோா் முன்னிலையில் குத்துவிளக்கேற்றப்பட்டு வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இதேபோல, பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களில் கமுதி திமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் குத்துவிளக்கேற்றினாா். இந்த நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலா் தங்கபாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுலைமான், தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமையாசிரியை பாக்கியலட்சுமி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் பொன்மாடசாமி நன்றி கூறினாா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

தொண்டி அருகே அரிய வகை கடல் பசுவின் உடல் மீட்பு

தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் உயிரிழந்த அரிய வகை கடல் பசுவின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 2 வயதுடைய அ... மேலும் பார்க்க