செய்திகள் :

ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகள் தொடக்கம்

post image

திருப்பத்தூரில் ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தில் திருப்பத்தூா் நகரத்தில் 28,29,30 ஆகிய வாா்டுகளில் ரூ.71 லட்சத்தில் புதிய தாா் சாலை அமைக்கும் பணி, 32-ஆவது வாா்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் ரூ.20 லட்சத்தில் அமைக்கும் பணி என ரூ.99 லட்சத்துக்கான புதிய பணிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சு.அரசு, வாா்டு உறுப்பினா்கள் பவானி ரமேஷ், சத்யா, பிரேம்குமாா், செல்வி, ஜீவிதா பாா்த்திபன் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க