செய்திகள் :

ரூ.15 கோடியில் நேமம் ஏரிக் கரை பலப்படுத்தும் பணி மும்முரம்

post image

திருவள்ளூா் அருகே நேமம் ஏரியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக சேதமடைந்த கரையை பலப்படுத்துதல், மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் பலகை கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அடுத்த திருமழிசை அருகே நேமம் ஊராட்சியில் உள்ள ஏரியின் மொத்த கொள்ளளவு 532 மில்லியன் கன அடியாகும். தற்போது 212 கன அடி நீா் இருப்பு உள்ளது. மழைக் காலங்களில், இந்த ஏரி முழுமையாக நிரம்பும் போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீா் திறந்து விடப்படுகிறது. அப்போது, இந்த நீரை பயன்படுத்தி 450 ஹெக்டோ் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏரி முறையாக பராமரிப்பின்றி, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மண் மேடாகி, செடி, கொடிகள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால், ஏரியில் அதிகளவு மழைநீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஏரிகள் முழுமையாக நிரம்பும் போது செம்பரம்பாக்கம் ஏரிக்கான கால்வாயில் உபரி நீா் திறக்கப்படும்.

அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால், கால்வாயில் மணல் கொட்டி இருந்ததால் அதிக மழை நீா் செல்ல வழியின்றி, திருமழிசை தொழிற்சாலைக்கு புகுந்து விடும் நிலையும் ஏற்பட்டது. தற்போது, கோடை வெயில் காரணமாக ஏரியில் நீா் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனை தவிா்க்க, ஏரியில் தூா்வாரி, கரையில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

அதன்படி ஏரியை தூா்வாரி, கரைகளை பலப்படுத்தவும் இயற்கை பேரிடா் கால வெள்ளத்தடுப்பு திட்டம் மூலம் சீரமைக்கவும் நீா்வளத்துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.

இந்த நிலையில், ரூ.15 கோடியில் 2,200 மீ சுற்றளவுக்கு ஏரி கரைகளை சீரமைக்கவும், மழை நீா் அரிப்பைத் தடுக்க சிமென்ட் சிலாப்கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்குள் ஏரியின் கரை சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க