செய்திகள் :

ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!

post image

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு சேதமடைந்திருக்கும் நிலையில், அரசு தரப்பில் இழப்பீடாக வெறும் ரூ. 10,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் தங்தார், கர்னா மற்றும் உரி ஆகிய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மூன்று நாள்களுக்கு மேலாக ஷெல் மற்று பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பலர் பலியான நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் கடுமையான சேதமடைந்தது.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர கிராமமான சோனோராவைச் சேர்ந்த முகமது மக்பூல் கான் கூறுகையில், ஷெல் தாக்குதலால் தனது வீடு முழுமையாக சேதமடைந்ததாகவும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷெல் தாக்குதலில் இடிந்த வீட்டின் பாகங்களை அகற்றுவதற்கே ரூ. 15,000 செலவு செய்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை ஆராய்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இழப்பீடாக ரூ. 10,000 கொடுத்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், எல்லையோர பரம்பில்லா கிராமத்தில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் சையத் முஸ்தபா என்பவரின் சகோதரியின் வீடும் மோசமாக சேதமடைந்துள்ளது.

அவர் கூறுகையில், “வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் என வெளிப்புறம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், உரிய இழப்பீடை வழங்காமல் வெறும் ரூ. 6,500 மட்டுமே அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உரி பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களின் ரூ. 35 முதல் 40 லட்சம் மதிப்பிலான வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அரசு தரப்பில் தலா ரூ. 1.30 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலைதான் பாகிஸ்தான் தாக்குதலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் நேர்ந்துள்ளதாக குறிப்பிடும் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு போதுமான இழப்பீடை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு!

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க