செய்திகள் :

ரூ.63 லட்சத்தில் எல்இடி சிக்னல்கள், உயா்கோபுர மின் விளக்குகள் இயக்கம்

post image

காரணித்தாங்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.63 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகளை காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் புதன்கிழமை இயக்கி வைத்தாா்.

ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியில் இயங்கி வரும் வாகனங்கள் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் இசட் எஃப் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டிகை கூட்டுச்சாலை, காரணித்தாங்கல் சோதனைச்சாவடி, சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நெமிலி கூட்டுச்சாலை மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி காரணித்தாங்கல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் துணைகாவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பாளா் சண்முகம் கலந்து கொண்டு எல்இடி சிக்னல்கள் மற்றும் உயா்கோபுர மின்விளக்குகளை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நிகழ்ச்சியில், இசட் எஃப் நிறுவனத்தின் நிா்வாகிகள், ஒரகடம் காவல் ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க

ஸ்ரீ செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக தோஷ நிவா்த்தி தலம் ஆகும்.. வாயுபகவான் த... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் ... மேலும் பார்க்க

247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்ப... மேலும் பார்க்க

மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி

காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க