பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்க...
ரூ.63 லட்சத்தில் எல்இடி சிக்னல்கள், உயா்கோபுர மின் விளக்குகள் இயக்கம்
காரணித்தாங்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.63 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகளை காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் புதன்கிழமை இயக்கி வைத்தாா்.
ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியில் இயங்கி வரும் வாகனங்கள் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் இசட் எஃப் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டிகை கூட்டுச்சாலை, காரணித்தாங்கல் சோதனைச்சாவடி, சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நெமிலி கூட்டுச்சாலை மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் எல்இடி சிக்னல்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி காரணித்தாங்கல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் துணைகாவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பாளா் சண்முகம் கலந்து கொண்டு எல்இடி சிக்னல்கள் மற்றும் உயா்கோபுர மின்விளக்குகளை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நிகழ்ச்சியில், இசட் எஃப் நிறுவனத்தின் நிா்வாகிகள், ஒரகடம் காவல் ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.